<$BlogRSDURL$>

31.1.21

வெற்றி வெகுதூரமில்லை  

 தணிந்திடுமோ என் தாகம் 

பனித்துளிகளே  உம்  ஸ்பரிசத்தால் 

ஆதவன் தான் வெகுண்டிடுவான் 

மேகங்களாய் உம்மை  கவர்வான் 

தீராத உங்கள் மையலிலே  

மழை தன்னை  பிரசவிப்பீர் 

பூமி என்னை குளிர்விப்பீர் 

பல்லுயிரும் இங்கு பயனுறும் !


வென்றது யார் இங்கே 

கொண்டது யாது காண் ?

எட்டாத கனி என்று 

ஏதும்  இங்கு இல்லை 

தனிப்பட்ட வெற்றி என்றொன்று 

இவ்வுலகில் ஏதும் இல்லை 

இயற்கையின்  சுழற்சிதன்னில் யாவரும் 

இட்டபணி செய்தல் வேண்டும்!


தன்னைத்தாண்டிய சிந்தை வேண்டும் 

மானுடம் தன்னை மேம்படுத்த 

இவ்வுலகை மேலும் சீர்படுத்த 

பொருள் தேடும் கூட்டத்தில் 

தொலைந்து போன விழுமியங்களை 

தலைமுறைக்கு எடுத்து உரைத்து 

மனங்கள் அனைத்தும் மீட்டெடுத்தால் 

ஆக்கங்கள் இங்கு சாத்தியமே!


வெற்றி அது வெகுதூரமில்லை 

தொடரட்டும்  நம் முயற்சிகள் 

கடமைகள் யாவும் செம்மையுற 

செவ்வனே நாம் செய்திடுவோம் 

காலம் அது துணைசெய்யும் 

கனவுகள் உயிர் பெறும் 

மக்கள் யாவரும் பயன்பெற்று 

கூடி நம்மை வாழ்த்திடுவர் !


- ஈரோடு ந,குமரேசன் 


|

This page is powered by Blogger. Isn't yours?