<$BlogRSDURL$>

1.4.19

கண்ணம்மா 

கண்ணம்மா கண்ணம்மா நானொரு கனவு கண்டேனடி
காதோடு நீ வந்து ஏதோ சொல்லும்படி

நெஞ்சோரமாய் நெஞ்சோரமாய் ஒரு மின்னல் அடிக்குதடி
உள்ளமெல்லாம் இனம் புரியா பேருவகைக் கொள்ளுதடி

சொல்லாமலே சொல்லாமலே அனைத்தும் விளங்குதடி
நீ சிந்தும் புன்னகையில் உள்ளம் சிதறுதடி

விழிகளோ விழிகளோ பருவ வித்தைகள் செய்குதடி
வேலிகள் தாண்டவே மனம் ஆவல் கொள்ளுதடி

பொருத்தமாய் பொருத்தமாய் பல காரணங்கள் தோணுதடி
உன்னோடு நேரம் கழிக்கவே அவையனைத்தும் சொல்லுதடி

சில்லென்று சில்லென்று சில  மழைத்துளிகள் விழுகுதடி
சிலேடையாய் நீ உதிர்த்த சொற்கள் தெரிக்குதடி

என்னுள்ளே என்னுள்ளே ஏகாந்தம் பரவுதடி
ஏதேதோ எண்ணி மனம் தவிதவித்து நிற்குதடி

பார்க்காமலே பார்க்காமலே நாட்கள் நரகமாகுதடி
பாவையே உன் கை வலையோசை என் காதிலொலிக்குதடி

போதாமலே போதாமலே குளிர் காற்றும் வீசுதடி
எங்கிருந்தோ வரும் உன் வாசனைமட்டும் என்  நாசி துளைக்குதடி

தாங்காமலே தாங்காமலே என் இதயம் சிலிர்க்குதடி
கடுங்குளிரிலும் உடலெங்கும் ஓர் உஷ்ணம் பரவுதடி

அருகிலே அருகிலே ஏனோ நீயும் இல்லையடி
நம் நி்னைவுகள் மட்டும் என்னோடு கபடியாடுதடி

நினைவிலே நினனவிலே ஒவ்வொன்றாய் சிலாகிக்கிறேனடி
உண்மையில் இந்த க்‌ஷணம் தான் வாழ்கிறேனடி

கண்ணம்மா கண்ணம்மா நீ ஏதும் சொல்லவேண்டாமடி
நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொள்ளடி

விரைவிலே விரைவிலே உன்னைச்சேரும் நாள் வருமடி
அதுவரை இந்தக்கனவுக் கலையாமல் பார்த்துக்கொள்ளடி.

|

haikoo-feb 19 

நட்சத்திரங்களே துணை
 விழிகள் தேடா உறக்கத்தில்
விடியலைத் தேட!!

-------------------------------------------------------------------------

ஏ மரமே! வா வெளியே
மாற்றம் வேண்டும்
விதை பேசுகிறேன்.

|

Use all your colours 


An enthralling voice suddenly speaks out to you;
It throws light as bright as lightening.
Light travels deep within you;
To those ends which remained unaccessed otherwise.
It reflects the various colours within you;
That once used and those that were never used.
It is a reminder call for you;
Use them all to make life bountiful.

|

இலையுதிர்கால மரங்கள் 

பல மரணங்களை
இலகுவாய் கடந்துவிடுகிறது
இலையுதிர்கால மரங்கள்.

|

Sleeping on a darkest night; 

Sleeping on a darkest night;
With a ray of hope deep in heart.
The wicked moon never appeared;
But the sun always does.
Every defeat is not a pitfall;
There is always something to learn.
People may just pass by;
But HE(God) always recognize you.
Day in and day out time just flees;
Don't bother your turn definitely arrives.
For life never trails back;
Love every experience you undergo!!

|

கானகம் 

விழிகள் விரிகிறது கானகக் காட்சிகளில்
மனது லயிக்கிறது இறைவனின் மாட்சியில்
எழில் கொஞ்சும் மலைகளும் உண்டு
அழகை மறுபரிசீலனை செய்யும் மலர்களுமுண்டு
இரைதேடும் விலங்குகள் ஓர் ஆயிரம்
பூச்சி வகைகளோ பற்பல ஆயிரம்
எண்ணிலடங்கா தாவரவகைகள்
எண்ணிமுடியா நற்பலன்கள்
தேனென இனித்திடும் சுனனகள்
தேவரும் விரும்பிக் குளித்திடும் அருவிகள்
விதவிதமாய் நீர் நிலைகள்
விருந்தளித்திடும் காய் கனிகள்
என்னே என்னே அவனின் படைப்பு
சொல்லி முடியுமா அதன் சிறப்பு
தன்னைக் காக்க வேட்டையாடுகிறான் காட்டுவாசி
உயிரினமே நீ தப்ப மாத்தியோசி
உண்மையில் உள்ளமே பெருங்காடல்லவா? - அதில்
உன்னதமாய் வாழும் வழிதேடடா?! மானிடா?!!!

|

Do you have a dream 

Everringing hunger bells deafens his ears;
Scintillating smiles, an ocean full of wishes and
Some little petty cash keeps him afloat;
Neither the patched clothes hiding only his loins nor the sky-roof;
Ever seems to shatter his mountain of hopes.
His hardwork could deter only his palm lines.
His self-esteem keeps him beaming ever promoting his search of dream future.
Do you have a dream; Make it true despite anything!!

|

மண்ணும் மைந்தர்களும் 

[15:43, 2/13/2019] kumaresan:

ஓடுகிறாள் ஓடுகிறாள் ஓய்வில்லாமல்
அந்த தோட்டத்தில் குறுக்குவெட்டாக
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்
ஆங்காங்கே ஆயுதத்துடன் ஆட்கள்
இவள் வருகைக்காய் தவமிருக்கிறார்கள்
உண்ணாமல் உறங்காமல் உறவுகளோடு
மிஞ்சிய உயிரோடு தன்மானச்செருக்கோடு
காலங்காலமாய் வாழ்வித்த பூமிக்காய்
தலைமுறைகளாய் தரணிக்கே உணவளிக்கும் மண்ணுக்காய்
விழியில் ஒளியிழந்தாலும் வலுவிழக்கா கரங்ளோடு
அவள் வரவை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
ஆங்காங்கே குளமுண்டு குட்டையுண்டு
கண்மாய்கள் பாசன வாய்க்கால்கள் பல உண்டு.
பவானியில் இங்கு ஓர் அனணயுமுண்டு
எங்கள் காவிரியில் கப்பலும் போனதுண்டு
அதுபோல் மண்ணில் முப்போகமும் விளைந்ததுண்டு.

வருடம் சில நாட்கள் மட்டுமே வரும்
இவளுக்காய் காத்திருக்கிறார்கள்
அதற்குபின் அவர்கள் செல்வது எங்கே?
ஏங்கித் தவிக்கும் உறவுகள் பசியாற
பல்லாங்குழியாடிய கைகள் தீப்பெட்டி செய்கிறது
ஆலம் விழுது ஊஞ்சல் மறந்து
ஆலை வேளைகளில் நேரம் கழிக்கிறது
கல்லுடைத்தும் கட்டிட வேலை செய்தும்
காவல் காத்தும் வாழ்வைத் தொலைக்கிறது.
படித்த சிலரே பதுவீசாய் அலுவலகப்பணியில்
பத்தாம்பசலிகள் இங்கு யாரும் இல்லை.
மண்- நீர் வளம் காக்க இந்நாட்டு மன்னர்கள்
மறந்தும் வழி செய்யவில்லையே.

மனதில் ஒட்டா மடிக்கணினியோடு மல்லுக்கட்டுபவனும்
மடை திறக்கவே விரும்புகிறான்
பொய்த்த வானிலை ஒதுக்கி
பொய்க்காத மண் வளம்காக்க வழிவகை வேண்டும்.
அவள் வருகை சில நாட்கள் தாண்டி
வருடம் முழுமைக்குமாய் இருத்தல் வேண்டும்
மண்ணில் தவழ்ந்த மைந்தர்களின்
மனது குளிர வேண்டும்
நம் பசியாற்றும் அவர்களின் வாழ்வாதாரம்
வற்றாத ஜீவனதியாய் மண்ணே பொன்னாய் ஆகிட வேண்டும்.
[15:55, 2/13/2019] kumaresan: மண்ணும் மைந்தர்களும்

ஓடுகிறாள் ஓடுகிறாள் ஓய்வில்லாமல்
அந்த தோட்டத்தில் குறுக்குவெட்டாக
அவள் ஓடிக்கொண்டே இருக்கிறாள்
ஆங்காங்கே ஆயுதத்துடன் ஆட்கள்
இவள் வருகைக்காய் தவமிருக்கிறார்கள்
உண்ணாமல் உறங்காமல் உறவுகளோடு
மிஞ்சிய உயிரோடு தன்மானச்செருக்கோடு
காலங்காலமாய் வாழ்வித்த பூமிக்காய்
தலைமுறைகளாய் தரணிக்கே உணவளிக்கும் மண்ணுக்காய்
விழியில் ஒளியிழந்தாலும் வலுவிழக்கா கரங்ளோடு
அவள் வரவை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
ஆங்காங்கே குளமுண்டு குட்டையுண்டு
கண்மாய்கள் பாசன வாய்க்கால்கள் பல உண்டு.
பவானியில் இங்கு ஓர் அனணயுமுண்டு
எங்கள் காவிரியில் கப்பலும் போனதுண்டு
அதுபோல் மண்ணில் முப்போகமும் விளைந்ததுண்டு.

வருடம் சில நாட்கள் மட்டுமே வரும்
இவளுக்காய் காத்திருக்கிறார்கள்
அதற்குபின் அவர்கள் செல்வது எங்கே?
ஏங்கித் தவிக்கும் உறவுகள் பசியாற
பல்லாங்குழியாடிய கைகள் தீப்பெட்டி செய்கிறது
ஆலம் விழுது ஊஞ்சல் மறந்து
ஆலை வேளைகளில் நேரம் கழிக்கிறது
கல்லுடைத்தும் கட்டிட வேலை செய்தும்
காவல் காத்தும் வாழ்வைத் தொலைக்கிறது.
படித்த சிலரே பதுவீசாய் அலுவலகப்பணியில்
பத்தாம்பசலிகள் இங்கு யாரும் இல்லை.
மண்- நீர் வளம் காக்க இந்நாட்டு மன்னர்கள்
மறந்தும் வழி செய்யவில்லையே.

உயிர்வழித் தேடிப்போனவன் உருகுகிறான்
மனமொத்த உழவுத்தொழில் செய்திடவே
 மனதில் ஒட்டா மடிக்கணினியோடு மல்லுக்கட்டுபவனும்
மடை திறக்கவே விரும்புகிறான்
பொய்த்த வானிலை ஒதுக்கி
பொய்க்காத மண் வளம்காக்க வழிவகை வேண்டும்.
அவள் வருகை சில நாட்கள் தாண்டி
வருடம் முழுமைக்குமாய் இருத்தல் வேண்டும்
மண்ணில் தவழ்ந்த மைந்தர்களின்
மனது குளிர வேண்டும்
நம் பசியாற்றும் அவர்களின் வாழ்வாதாரம்
வற்றாத ஜீவனதியாய் மண்ணே பொன்னாய் ஆகிட வேண்டும்.

|

கவிதை  

கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்கும் எண்ணங்களை எல்லாம்
ஒரு கவிதைக்குள் அடக்க முடிவதில்லை

நீட்டி முழக்கிச் சொல்லலாம் என்றால்
இங்கு அதை படிப்பார் யாருமில்லை

அவசர உலகில் அவரவர் வேலை அவரவருக்கு
யாரையும் இங்கு கட்டாயப்படுத்த முடியுமா என்ன?

கவிதை என்றாலே கிலோ எவ்வளவென்று கேட்போரும்
அண்ணாச்சிகடை பொட்டலத்தில் பார்த்தது என்று சொல்வோருமுண்டு

ஏன் ஒரு சிலர் கவிதை என்றவுடன் ஓடி விடுவதும் நடக்கும்
வெகுசிலரே கவிதையை ஆழ்ந்து ரசித்து தொலைந்து போகிறார்கள்.

அந்த ரசனை ஒரு சிலருக்கு மட்டுமே பட்டா போட்டுத்தரப்பட்டுள்ளது.
உண்மையில் அவர்களாலேயே ஒரு கவிதை நிஜமாய் உயிர் பெற்று எழுகிறது.

காலங்கள் தாண்டி மனதில் கல்வெட்டாய் நிற்கிறது
வாழ்க்கையின் சிக்கலான பகுதிகளை கடந்து வர உதவுகிறது

சில காதல் பேசுகிறது சில கடமை உணர்த்துகிறது
சமூகத்தில் ஓர் மாற்றத்தை உருவாக்கவும் முயல்கிறது.

வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும்
 கவிதை  ஓர் அங்கம் வகிக்கிறது
ஏன் ? நம் வாழ்க்கையே ஒரு முடிவறியா கவிதையல்லவா?!

|

விடை தெரியா வினாக்கள் 



வாழ்க்கை வினாக்களால் ஆனது
விடையளிக்க முழு வினாத்தாள் கொடுக்கப்படவில்லை
ஆனால் நித்தம் புதுப்புது வினாக்கள்.

இது சிறுவினாவா?
இல்லை நெடுவினாவா?
நிதானித்து முடிவெடுப்பதற்குள்
ஒன்றன் பின் ஒன்றாய் வினாக்கள் சேர்ந்து விடுகின்றன.

ஒரு தேர்ந்த கதாசிரியர்
ரசிகனின் கடிதங்களை அலசுவது போல்
நாம் குத்துமதிப்பாய் வினாவை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது
அப்பாடி! விடை அளிப்போம் ! என்றால் முடியுமா?

எனக்கு முதலில் விடையளி என்று வினாக்களுக்குள் ஒரு போட்டி துவங்குகிறது
முட்டி மோதி பல வினாக்களுக்கு விடையளிக்க முயல்கிறோம்
அது சரியா? தவறா?
என்று மறுபடியும் வினாக்கள் பிறக்கின்றன.

வாழ்க்கை விடை தெரியா வினாக்களால் நிரம்பி வழிகிறது
 அனைத்திற்கும்
விடை தெரியும் முன் நேரம் கடந்து விடும்
குறுகிய காலத்தில் ஓரிரு வினாக்களுக்காவது ஆத்மார்த்தமாய் விடையளியுங்கள்.
வாழ்க்கை வசந்தமாகும்.

|

கிராமத்து விடியல் 



விடியல் என்றாலே ஓர் புத்துணர்வு
வானிலும் நம் மனதிலும் புதுப்பொலிவு
சுவாசத்தில் தூயக்காற்றின் நுழைவு
வாசலில் மாக்கோலத்தின் நிறைவு

முன்விடியலில் துவங்கும் உழவுத்தொழில்
இடையே சேவலின் கூவல்
மெலிதாய் பனியின் தூறல்
ரம்மியமாய் கதிரவனின் ஒளி பரவல்

சுத்தமாகும் மாட்டுத் தொழுவம்
வரட்டிகளாய் மாறும் சாணம்
பதமான பசும்பாலின் வாசம்
பாசமிக்க பசுவின் நேசம்

குளத்தில் ஓர் ஆனந்தக் குளியல்
சிறார்களின் ஆரவாரக் கூச்சல்
விடலைகளின் சாகச முயற்சிகள்
கடைவிழிப்பார்வை வீசும் பெண்கள்

அன்றலர்ந்த மலர்களின் வாசம்
அலையலையாய் ஊரெங்கும் வீசும்
அலைமோதும் மங்கையர் கூட்டம்
அழகானதை தேடிப் பறிக்கும்.

அருகம்புல்லையும் கொஞ்சம் கிள்ளும்
மலரோடு சேர்த்து மாலையாக்கும்
அரசையும் வேம்பையும் சுற்றி வந்து
ஆனைமுகனுக்கு அணிவித்து ஆயிரம் வேண்டும்

வீடுவரை கேலிப்பேச்சு விண்னை பிளக்கும்
கொலுசொலியும் கைவளையோசையும் அதனை மிஞ்சும்
மருதாணி சிவந்த அழகை வைத்து
மாமன் வருவதாய் கதை சொல்லும்.

பின் தொடரும் காளையர் கூட்டம்
டீக்கடை கண்டவுடன் பின் வாங்கும்
ஊர் தலைகள் அங்கே சங்கமிக்கும்
ஊடகமும் சொல்லாத அரசியல் முழங்கும்.

ஒவ்வொரு விடியலும் ஓர் வரம்
ஒப்பனைகளற்ற கிராமத்து விடியல் சுகானுபவம்.

|

பாதை மாறிய பயணிகள்!! 



பாதை மாறிய பயணிகளே
சேருமிடம் தான் அறிவீரோ?
பகுத்து ஆயும் பண்பினுக்கே
பகுதி விடுமுறை அளித்தீரோ?

ஓங்கியுயர்ந்த ஓர் குன்று
சுடர்விட்டெரியும் விளக்கு ஒன்று
அனைவருக்குள்ளும் அது உண்டு
அது காட்டும் வழி நடப்பீரோ?

தொலைதூரம் போன பின்பே
தொல்லைதரும் இடர் சந்திப்பீரோ?
திக்கற்று நின்ற பின்னே
தினணயளவு ஏனும் சிந்திப்பீரோ?

தினந்தோறும் காணும் வாழ்வினிலே
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் இயல்பானதன்றோ?
திடீர் மாயங்களில் தொலைந்து
கொண்ட பாதைதனை மறப்பீரோ?

காயங்கள் ஆற காலங்களாகும்
கற்றதில்லை என்று சொல்வீரோ?
தக்க தருணத்தில் சுதாரித்தே
தகுந்த பாதை மாற்றுவீரோ?!!

|

உனக்காகவே நான் கண் விழிக்கிறேன் 

உனக்காகவே நான் கண் விழிக்கிறேன்
உன் எழில்கோலத்தில் மனம் லயிக்கிறேன்.

அனுதினமும் நான் உன்னைக் காண்கிறேன்
ஆவல் மட்டும் இன்னும் குறையவில்லை.

எப்படி உன்னால் மட்டுமே முடிகிறது?
நாளும் ஓர் வண்ணம் கொள்ள!

இருள்சூழ்ந்த இரவின் நெடிய நீட்சி
பலர் மனதில் இனம்புரியா மருட்சி

இருந்தும் ஓர் அணையா    விளக்கு
நம்பிக்கையின் கீற்றாய் மனதில் சுடர்விடுகிறது.

அதனாலேயே விழிமூடி இரவைக் கடக்கிறோம்
சற்றேனும் எண்ணங்களுக்கு விடுப்பு அளிக்கிறோம்.

மோர்கடைய திரளும் வெண்ணெயென
தோன்றும்
பால்நிலவும் ஓர்நாள் வராமல் போகலாம்.

அந்தக் கீழ்வானில் உதிக்கும் ஒளிப்பேழை
நீ ஒருநாளும் வாராமல் இருந்ததில்லை.

நம்பிக்கையின் ஆதார சக்தியாய் நீ
விடியலின் வாசலை பொன்கதிர்களால் திறக்கிறாய்

வாய்ப்புகள் ஒவ்வொருவர் வாசலிலும் வருமென்று
சொல்லாமல் நீ செய்கையில் அறிவிக்கிறாய்.

உன்னைக் காண்பதிலே மட்டற்ற மகிழ்ச்சி
அனைவர் வாழ்விலும் தொடரட்டும் வளர்ச்சி!

|

ஆனந்தக் கூத்து. 

[16:24, 2/11/2019] kumaresan: அந்த வாரத்தில் ஏழாவது முறையாக 29c-ல்  ஏறிய பாஸ்கரன் எப்போதும்போல்  சற்றே கண்ணயர்ந்தான். மைலாப்பூர் என்ற கண்டக்டர் குரல் கேட்டு உடனே எழுந்து நிறுத்தத்தில் இறங்கினான். அவனது கால்கள் தான் வழக்கமாகச் செல்லும் கபாலீசுவரர் கோயில் நோக்கி தன்னிச்சையாக பயணித்தன. மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் கல்பனாவை அவன் இந்த கோயிலில் தான் சந்தித்து இருந்தான். தனியாக அல்ல இரு வீட்டு பெரியவர்களும் உடன் இருந்தனர். கல்பனாவை பார்த்தவுடன் இவனுக்கு பிடித்து போனது. பாஸ்கரனையும் அவளுக்குப் பிடித்திருந்தது.

பிறகென்ன பெரியவர்கள் உடனெ முகூர்த்த தேதி குறிக்க திருமணம் எளிமையாக அதே கோயிலில் நடந்தேறியது. அப்போது பாஸ்கரன் ஒரு தனியார் வங்கியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அரசாங்க உத்யோகத்திற்கு தகுதி தேர்வு எழுதிக் கொண்டு இருந்தான். கல்பனாவும் அருகிலுள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வந்தாள்.

அவனுக்குத் தேவையான புத்தகங்களை அவள் அவ்வப்போது பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வருவதுண்டு. ஒரு நாள் குறிப்பிட்ட வினாவிற்கு விடைதெரியாமல் பாஸ்கரன் நீண்ட  நேரம் முயற்சித்துக் கொண்டிருந்தான். எதேச்சையாக கவனித்த கல்பனா உடனே விடை சொன்னாள். மிகுந்த ஆச்சரித்தோடு அவன் நோக்க அவள் ஓய்வு நேரத்தில் தானும் படித்து வருவதாகக் கூறினாள். அன்று முதல் வேலை நேரம் போக இருவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாயினர். இருவருக்கும் அந்த வருட தேர்வில் தேர்ச்சி கிடைத்தது.

அதே ஊரில் வெவ்வேறு அரசு துறைகளில் அரசுப்பணி அமைந்தது. பாஸ்கரன் கல்பனா மனமொத்த தம்பதிகளாயிர்ந்தனர். வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல் பயணித்துக் கொண்டிருந்தது.

கோயிலை நெருங்கிவிடவே இந்த நினனைவுகளுக்கு விடையளித்து, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து , வெளிப்பிரகாரத்தையும் ஓர் வலம் வந்து அமர்ந்தான். இப்போது அவனது சிந்தனை அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரியும் இளைய மகன் ரகுவை நோக்கி பயணித்தது. 32 முடிந்து விட்டது இன்னும் திருமணமாகவில்லை. மாதம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பவன் போன முறை திருமணத்தை பற்றி பாஸ்கரன் வலியுறுத்தியதால்  நேரிடையாக அழைப்பதில்லை. WhatsApp குறுஞ்செய்தியோடு ரகு தனது சம்பாசனைகளை   முடித்துக் கொள்கிறான்.
கல்பனா ஏன் வரவில்லை என்று நீங்கள் இந்த இடத்தில் கேட்க வேண்டும். அவளுக்கு கபாலி மீது கோபம், தங்களது திருமணத்தை நடத்தியவர் ஏன் மகனது திருமணத்தை மட்டும் இன்னும் தள்ளிப் போடுகிறாரென்று?? தவறாமல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வருபவள் ரகுவின் திருமணம் எப்போது நடக்கிறதோ அப்போது தான் வருவேன் என்று சபதம் போட்டுள்ளாள். பாவம் பாஸ்கரனால் தான் தாங்க முடியாமல் மூத்த மகனான கபாலியை பார்க்க தினம் வருகிறான். ஆம் இவர்களுக்கு ஈசன் தான் முதல் குழந்தை.

பாஸ்கரன் வீடு திரும்ப கல்பனா சுடச்சுட காபி கலந்து தந்தாள். என்ன சொன்னான் கபாலி என்று கேட்டாள். கோயிலுக்கு வருவதில்லையே தவிர அவள் மனதில் கபாலியே நிறைந்திருந்தான். பாஸ்கரன் கபாலி என்ன சொல்லப் போறான், ஏதோ அவனை பார்த்து ரகுவை சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுடானு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா எனக்கு ஒரு திருப்தி என்றான்.
[18:34, 2/11/2019] kumaresan: அந்த வாரத்தில் ஏழாவது முறையாக 29c-ல்  ஏறிய பாஸ்கரன் எப்போதும்போல்  சற்றே கண்ணயர்ந்தான். மைலாப்பூர் என்ற கண்டக்டர் குரல் கேட்டு உடனே எழுந்து நிறுத்தத்தில் இறங்கினான். அவனது கால்கள் தான் வழக்கமாகச் செல்லும் கபாலீசுவரர் கோயில் நோக்கி தன்னிச்சையாக பயணித்தன. மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் கல்பனாவை அவன் இந்த கோயிலில் தான் சந்தித்து இருந்தான். தனியாக அல்ல இரு வீட்டு பெரியவர்களும் உடன் இருந்தனர். கல்பனாவை பார்த்தவுடன் இவனுக்கு பிடித்து போனது. பாஸ்கரனையும் அவளுக்குப் பிடித்திருந்தது.

பிறகென்ன பெரியவர்கள் உடனெ முகூர்த்த தேதி குறிக்க திருமணம் எளிமையாக அதே கோயிலில் நடந்தேறியது. அப்போது பாஸ்கரன் ஒரு தனியார் வங்கியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அரசாங்க உத்யோகத்திற்கு தகுதி தேர்வு எழுதிக் கொண்டு இருந்தான். கல்பனாவும் அருகிலுள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வந்தாள்.

அவனுக்குத் தேவையான புத்தகங்களை அவள் அவ்வப்போது பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வருவதுண்டு. ஒரு நாள் குறிப்பிட்ட வினாவிற்கு விடைதெரியாமல் பாஸ்கரன் நீண்ட  நேரம் முயற்சித்துக் கொண்டிருந்தான். எதேச்சையாக கவனித்த கல்பனா உடனே விடை சொன்னாள். மிகுந்த ஆச்சரித்தோடு அவன் நோக்க அவள் ஓய்வு நேரத்தில் தானும் படித்து வருவதாகக் கூறினாள். அன்று முதல் வேலை நேரம் போக இருவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாயினர். இருவருக்கும் அந்த வருட தேர்வில் தேர்ச்சி கிடைத்தது.

அதே ஊரில் வெவ்வேறு அரசு துறைகளில் அரசுப்பணி அமைந்தது. பாஸ்கரன் கல்பனா மனமொத்த தம்பதிகளாயிர்ந்தனர். வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல் பயணித்துக் கொண்டிருந்தது.

கோயிலை நெருங்கிவிடவே இந்த நினனைவுகளுக்கு விடையளித்து, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து , வெளிப்பிரகாரத்தையும் ஓர் வலம் வந்து அமர்ந்தான். இப்போது அவனது சிந்தனை அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரியும் இளைய மகன் ரகுவை நோக்கி பயணித்தது. 32 முடிந்து விட்டது இன்னும் திருமணமாகவில்லை. மாதம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பவன் போன முறை திருமணத்தை பற்றி பாஸ்கரன் வலியுறுத்தியதால்  நேரிடையாக அழைப்பதில்லை. WhatsApp குறுஞ்செய்தியோடு ரகு தனது சம்பாசனைகளை   முடித்துக் கொள்கிறான்.
கல்பனா ஏன் வரவில்லை என்று நீங்கள் இந்த இடத்தில் கேட்க வேண்டும். அவளுக்கு கபாலி மீது கோபம், தங்களது திருமணத்தை நடத்தியவர் ஏன் மகனது திருமணத்தை மட்டும் இன்னும் தள்ளிப் போடுகிறாரென்று?? தவறாமல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வருபவள் ரகுவின் திருமணம் எப்போது நடக்கிறதோ அப்போது தான் வருவேன் என்று சபதம் போட்டுள்ளாள். பாவம் பாஸ்கரனால் தான் தாங்க முடியாமல் மூத்த மகனான கபாலியை பார்க்க தினம் வருகிறான். ஆம் இவர்களுக்கு ஈசன் தான் முதல் குழந்தை.

பாஸ்கரன் வீடு திரும்ப கல்பனா சுடச்சுட காபி கலந்து தந்தாள். என்ன சொன்னான் கபாலி என்று கேட்டாள். கோயிலுக்கு வருவதில்லையே தவிர அவள் மனதில் கபாலியே நிறைந்திருந்தான். பாஸ்கரன் கபாலி என்ன சொல்லப் போறான், ஏதோ அவனை பார்த்து ரகுவை சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுடானு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தா எனக்கு ஒரு திருப்தி என்றான்.

பிறகு தொலைக்காட்சி பார்க்க துவங்கினான். இன்றைய ஆண் பெண் மற்றும் அருந்ததியர்களின் பாலினப்பாகுபாடற்ற உறவு நிலைகள் குறித்து ஓர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நளினா என்ற அருந்ததி தான் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டேன். சமுதாய ஓர் அளவுக்கு தன்னை ஏற்றுக் கொண்டாலும் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை  என்று தன் ஆதங்த்தை வெ…
[18:48, 2/11/2019] kumaresan: அந்த வாரத்தில் ஏழாவது முறையாக 29c-ல்  ஏறிய பாஸ்கரன் எப்போதும்போல்  சற்றே கண்ணயர்ந்தான். "மைலாப்பூர்! மைலாப்பூர்! என்ற கண்டக்டர் குரல் கேட்டு உடனே எழுந்து நிறுத்தத்தில் இறங்கினான். அவனது கால்கள் தான் வழக்கமாகச் செல்லும் கபாலீசுவரர் கோயில் நோக்கி தன்னிச்சையாக பயணித்தன. மனதில் ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின. முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் கல்பனாவை அவன் இந்த கோயிலில் தான் சந்தித்து இருந்தான். தனியாக அல்ல இரு வீட்டு பெரியவர்களும் உடன் இருந்தனர். கல்பனாவை பார்த்தவுடன் இவனுக்கு பிடித்து போனது. பாஸ்கரனையும் அவளுக்குப் பிடித்திருந்தது.

பிறகென்ன பெரியவர்கள் உடனே முகூர்த்த தேதி குறிக்க திருமணம் எளிமையாக அதே கோயிலில் நடந்தேறியது. அப்போது பாஸ்கரன் ஒரு தனியார் வங்கியில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அரசாங்க உத்யோகத்திற்கு தகுதி தேர்வு எழுதிக் கொண்டு இருந்தான். கல்பனாவும் அருகிலுள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றி வந்தாள்.

அவனுக்குத் தேவையான புத்தகங்களை அவள் அவ்வப்போது பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வருவதுண்டு. ஒரு நாள் குறிப்பிட்ட வினாவிற்கு விடைதெரியாமல் பாஸ்கரன் நீண்ட  நேரம் முயற்சித்துக் கொண்டிருந்தான். எதேச்சையாக கவனித்த கல்பனா உடனே விடை சொன்னாள். மிகுந்த ஆச்சரித்தோடு அவன் நோக்க அவள் ஓய்வு நேரத்தில் தானும் படித்து வருவதாகக் கூறினாள். அன்று முதல் வேலை நேரம் போக இருவரும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாயினர். இருவருக்கும் அந்த வருட தேர்வில் தேர்ச்சி கிடைத்தது.

அதே ஊரில் வெவ்வேறு அரசு துறைகளில் அரசுப்பணி அமைந்தது. பாஸ்கரன் கல்பனா மனமொத்த தம்பதிகளாயிருந்தனர். வாழ்க்கை ஒரு தெளிந்த நீரோடை போல் பயணித்துக் கொண்டிருந்தது.

கோயிலை நெருங்கிவிடவே இந்த நினனைவுகளுக்கு விடையளித்து, கபாலீசுவரரையும் கற்பகாம்பாளையும் தரிசித்து , வெளிப்பிரகாரத்தையும் ஓர் வலம் வந்து அமர்ந்தான். இப்போது அவனது சிந்தனை அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரியும் இளைய மகன் ரகுவை நோக்கி பயணித்தது. 32 முடிந்து விட்டது இன்னும் திருமணமாகவில்லை. மாதம் ஒரு முறை தொலைபேசியில் அழைப்பவன் போன முறை திருமணத்தை பற்றி  வலியுறுத்தியதால்  நேரிடையாக அழைப்பதை நிறுத்தியிருந்தான்.  WhatsApp குறுஞ்செய்தியோடு ரகு தனது உரையாடல்களை   முடித்துக் கொள்கிறான்.
கல்பனா ஏன் வரவில்லை என்று நீங்கள் இந்த இடத்தில் கேட்க வேண்டும். அவளுக்கு கபாலி மீது கோபம், தங்களது திருமணத்தை நடத்தியவர் ஏன் மகனது திருமணத்தை மட்டும் இன்னும் தள்ளிப் போடுகிறாரென்று?? தவறாமல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வருபவள் ரகுவின் திருமணம் எப்போது நடக்கிறதோ அப்போது தான் வருவேன் என்று சபதம் போட்டுள்ளாள். பாவம் பாஸ்கரனால் தான் தாங்க முடியாமல் மூத்த மகனான கபாலியை பார்க்க தினம் வருகிறான். ஆம் இவர்களுக்கு ஈசன் தான் முதல் குழந்தை.

பாஸ்கரன் வீடு திரும்ப கல்பனா சுடச்சுட காபி கலந்து தந்தாள். என்ன சொன்னான் கபாலி என்று கேட்டாள். கோயிலுக்கு வருவதில்லையே தவிர அவள் மனதில் கபாலியே நிறைந்திருந்தான். பாஸ்கரன் கபாலி என்ன சொல்லப் போறான், ஏதோ அவனை பார்த்து ரகுவை சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுடானு ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தால் எனக்கு ஒரு திருப்தி என்றான்.

பிறகு தொலைக்காட்சி பார்க்க துவங்கினர். இன்றைய ஆண் பெண் மற்றும் அருந்ததியர்களின் பாலினப்பாகுபாடற்ற உறவு நிலைகள் குறித்து ஓர் விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நளினா என்ற அருந்ததி தான் வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொண்டேன். சமுதாய ஓர் அளவுக்கு தன்னை ஏற்றுக் கொண்டாலும் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை  என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். குழுமியிருந்த பார்வையாளர்களில் ஒருவன் தெய்வம் செய்த பிழை உங்கள் பிறப்பு அதற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று ஆறுதல் சொல்ல முயன்றான். நளினாவிற்கு சுரீரென்று கோபம் வந்தது கூடவே கொஞ்சம் கண்ணீரும். எங்கள் பிறப்பு பிழை என்று பார்ப்பதாலேயே நீங்கள் திருத்தத்தை எதிர்பார்க்கிறீர்கள். இது இயற்கை என்பதை மறந்து விடாதீர்கள். சமூகத்தில் மாற்றம் உருவாக முதலில் அது உங்கள் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கர்ஜித்தாள்.கரகோஷம் எழுந்து அடங்கியது.

அடுத்ததாக வந்த மன நல நிபுணர் தற்கால சூழ்நிலையில் ஏன் ஆணோ பெண்ணோ திருமணம் பற்றி ஓர் முடிவிற்கு வர தயங்குகின்றனர் என்பது குறித்து விளக்கமளிக்கத் துவங்கினார். அவரது பேச்சு பிடிக்காமல் போகவே தொலைக்காட்சிப் பெட்டியை பாஸ்கரன் அனைத்தார்.

ஏனோ நளினாவின் முகம் அவர் கண் முன் நிழலாடியது. கல்பனாவும் நளினா மனதை சற்று விசாலமாக்கிவிட்டாள் என்றாள். அலைபேசி ஒலித்தது- "தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?". ரகுவின் அலைபேசி எண் திரையில் மிளிரவே கல்பனா ஆவலாய் எடுத்தாள். பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பின் ரகு ஏதோ சொல்ல முற்பட்டான். ஆனால் தயங்கினான். தாயல்லவா கல்பனா உணர்ந்து கொண்டாள். ரகு நீ யாரை விரும்புகிறாய் என்று சொல் அவளேயே நீ திருமணம் செய்து கொள் என்றாள். அப்போதும் அவன் தயங்கவே, பாஸ்கரன் என்னடா ரகு?  நமக்குள்ள என்னடா? என்றார். இல்லை அப்பா வந்து நான் ஒரு திருநங்கையை விரும்புகிறேன் என்றான்.

அந்தக் கபாலி, சிவன், ஈசன் அங்கு ஆனந்தக் கூத்தாடினான்.

|

தாரகையே என் பெண் நிலவே! 

(Tamil movie song style)

சரணம்

தாரகையே என் பெண் நிலவே தரணி ஆள வா
தாளங்கள் தான் தப்பாமலே தளிர் நடைபோட்டு வா.


பல்லவி 1

உருட்டியாட்டும் உன் விழிகள் பல விவரங்கள் சொல்லுதே
விதவிதமாய் பல உணர்வுகளை அள்ளி வீசுதே

நீ கொள்ளும் பொய்கோபத்தில் நான் மிரண்டு போகிறேன்
உன் கரங்கள் என் கண்களை மூடும்போது நானும் குழந்தையாகிறேன்.

தினம் பொழுது புலரும் போது நான் தவித்து போகிறேன்
உன் பள்ளியிலே சேர்ந்து நானும் படிக்க விரும்புகிறேன்

நீ இல்லா பொழுதுகளில் நான் தொலைந்து போகிறேன்
அடிக்கடி நம் வீட்டு வாசலில் என் கண்கள் பதிக்கிறேன்

(தாரகையே....)


பல்லவி 2

வார இறுதிக்காய் என் மனம் அன்பில் ஏங்கித் தவிக்குதே
நம் இருவரில் யார் குழந்தையென்று உன் அன்னை கேட்கிறாள்?

உடனே எழுந்து எங்கோ சென்று மீண்டும் வருகிறாய்
என் உடை அணிந்து மீசை வரைந்து 'அப்பா' தான் குழந்தை என்கிறாய்

அந்த வினாடி கண்ணே நானோ என்னை மறக்கிறேன்
மீண்டும் ஜனித்து உன் மடியில் சாய்ந்து உன் மகனுமாகிறேன்

மழலை என்று சொல்லி ஏதேதோ பிதற்றும் பித்தனாகிறேன்
நீயோ தாயாகி என் தலைக்கோதி கண்கள் பார்த்து கதைகள் சொல்கிறாய்.

(தாரகையே....)

|

இறைவன் பாட்டு 



சரணம்

இறைவனின் வாசலில் நாள்தோறும் ஆயிரம் வண்ணங்கள்
அவையாவும் வெவ்வேறு வாழ்வுகளின் தனித்தனி வார்ப்புகள்
அவனொருவனே ஓர் நாளில் அனைத்தையும் காண்கின்றான்
பஞ்சபூதங்கள் யாவிலும் புதுப்புது மாட்சிகள் செய்கின்றான்.

பல்லவி 1

விளங்காத பல பல  யுத்திகள் செய்கின்றான்
வினனகள் பல புரிந்திடவே உந்துதல்கள் தருகின்றான்.

ஆக்கல் காத்தல் அழித்தல் அவனின் செயலன்றோ?!
ஆயினும் அதில் ஏன் ஆருடம் பார்க்க வைக்கின்றான்

அவன் அணிந்திருக்கும் பூமாலையில் எண்ணிலடங்கா வாசனைகள்
அவன் படைத்த மனிதருக்குள் பற்பல லட்சியங்கள்

காற்றிலாடும் தீபங்களை நாம் கைகொண்டு காத்திட முடியுமா?!
அவன் தன் கருணைப் பார்வையின்றி எதுவும் சாத்தியமாகுமா?!

வேளை வரும்போது நாம் யாவரும் விடைபெற வேண்டாமா?
வேதாந்தம் விஞ்ஞானமெல்லாம்
 இறைவன் முன் செல்லுபடியாகுமா?!

(இறைவனின் வாசலிலே..)


பல்லவி 2

உதித்த மலர்கள் யாவும் ஓர் நாள் உதிரும் அல்லவா?
நாம் இங்கு உள்ளவரை நறுமணம் பரப்ப வேண்டுமல்லவா?

இந்தப் பிறவியின் பயன் இங்கு யார் அறிவார்
இன்பம் துன்பம் அனைத்திலும்  அதை அவர் தெரிவிப்பார்

நான் படைத்ததெல்லாம் நுகர் என்று உன் முன் வைப்பார்
நாளை உன் தோற்றத்தில் பற்பல மாற்றம் செய்வார்

உன்னைக் காத்தல் உன் கடன் என்று உரைத்திடுவார்
உண்மையில்லை என்றாலோ யாமிருக்க பயமேன் என்று சிரிப்பார்

யாரும் அறியாத பொழுதிலே அருகில்வந்து வா என்றிடுவார்
பதில் ஏதும் சொல்லும்
முன்னே அழைத்துச் சென்றிடுவார்

(இறைவனின் வாசலிலே .....)

|

காலத்தொடரி!! 

காலமெனும் ஏட்டில் ஒரு
சில பக்கங்களை என்னையும் அறியாமல் தொலைத்திருக்கிறேன்
சிலவற்றை நிரப்பாமல்
விட்டு இருக்கிறேன்.

திடீரென்று அவற்றை மீட்டெடுக்கும் வாய்ப்பு
ஒவ்வொரு மீட்பும் ஓர் குறிப்பை அளிக்கிறது.

இடைவிடாது கரைசேரத் துடிக்கும் அலைகள் போல
அவை மீண்டும் மீண்டும் எதையோ உணர்த்த முற்படுகின்றன.

குறிப்புகளை முற்றிலும்
உணர்ந்து கொள்ள
இந்தக் காலத்தொடரியில் பின்னும்
 உடனும் போய் வருதல் சாத்தியமாகுமோ?


|

This page is powered by Blogger. Isn't yours?