<$BlogRSDURL$>

9.1.21

காலமெனும் மருந்து 

 காலமெனும் மருந்து 


ஊழிக்காற்று கொண்டு சேர்க்கும் செய்திகள் 

அவனிதனில் யாரும் அறிந்திரா வலிகள் 

கட்டிய பல பல கோட்டைகள் 

திறவாமலே எங்கும் தொங்கிய பூட்டுகள் 


ஆழிப்பேரலையின் எட்டி பறித்த கைகள் 

ஆழ்மனதினில் என்றும் ஆறா ரணங்கள் 

விட்டிலாய் பல பல உறவுகள் 

விட்டுபோனதால் முகவரி தொலைத்த உயிர்கள் 


யுத்தபூமி கற்று தந்த பாடங்கள் 

யுகயுகமாய் மனிதம் உணரா மாண்புகள் 

பட்டென பல பல பிரிவுகள் 

அரங்கேறியதால் தூக்கம் இழந்த விழிகள் 


மௌனம் கிளர்ந்து எழுப்பும் பேரோசைகள் 

அன்புடை நெஞ்சின் நீங்கா சுடுப்புண்கள் 

மனதினில் பல பல எண்ணங்கள்

பாசக்கயிறாய் மாறி நிற்கும் மாயங்கள் 


இன்னும் இங்கே உண்டு பல்லாயிரங்கள் 

அந்த ஆதவனும் கண்டிரா பரிதவிப்புகள் 

மனமெனும் மாயாவியின் போராட்டத்தை வென்றவர்கள் 

உலகினிலே காலத்தை மருந்தாய் உண்டவர்களன்றோ?!


                                                 - ஈரோடு ந .குமரேசன் 



|

This page is powered by Blogger. Isn't yours?