<$BlogRSDURL$>

14.7.16

நீங்கள் செல்வாக்கு மிக்கவரா? ! 

ரொபேர்ட் சியால்டினி (Robert Cialdini) கீழ்கண்ட ஆறு கொள்கைகளை கடைபிடித்தால் நீங்களும் செல்வாக்கு மிக்கவர் ஆகலாம் என்கிறார்:

1.எதிர் வினை (Reciprocation)
2.சமூக ஆதாரம் (Social Proof)
3.அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மை (Commitment and consistency)
4.விருப்பம் மற்றும் ஈர்ப்பு (Liking)
5.அதிகாரம் (Authority)
6.பற்றாக்குறை(scarcity)
 

|

12.7.16

அன்புடை நெஞ்சம்  

எனக்கான உனது அன்பு
உனக்கான எனது அன்பு
மானுடத்திற்கான   நமது அன்பு
உறைந்து போய் கிடக்கிறது.

நானோ நீயோ சமூகமோ
கவர்ந்துவிட முடியாதபடி ஒளிந்திருக்கிறது 
ஆழத்தில் அடி ஆழத்தில்
தன்னை மறைத்து வைத்திருக்கிறது.

பல்வேறு அடுக்குகளுக்குள் பூட்டி
தன்னை பத்திரப்படுத்தி உள்ளது
நம்முடைய இந்தப் பயணம்
அடுக்குகள் மேலேயே  நடைபெறுகிறது.

பற்பல சமயங்களில் அடுக்குகள்
ஒருங்கிணைந்து கண்களை மறைக்கின்றன
நாம் யார் என்பதை
மறந்து  செயல்பட  வைக்கின்றன.

கோபம் பயம் சோகம் வருத்தம்
என்று அவை நர்த்தனமாடுகின்றன.
உண்மை அன்பை   நம்
கைகளுக்கு எட்டாமல் செய்கின்றன.

உள்நோக்கி நாம் உத்வேகத்துடன்
உறுதியுடன்  தொடர்ந்து பயணிப்போம்
அடுக்குகளைத்   தகர்த்து எறிவோம்
உள் அன்பை உயிர்ப்பிப்போம்.

ஆனந்தமாய் உறவாடுவோம் !! மானுடம் காப்போம் !! 

- நன்றி
  குமரேசன்



 

|

This page is powered by Blogger. Isn't yours?