<$BlogRSDURL$>

10.9.14

உறவின் (ஸ்)வாசம் 

மெல்ல பூக்கிறது
ஓர் உறவு
வானுக்கும்
மண்ணுக்கும்
சாரல்  மழை!

உள்ளே பரவுகிறது
ஓர்  மணம்
ஊருக்கும்
உறவுக்கும் (ஆன )
மண்  வாசம்!

ஊடே விரிகிறது
ஓர் மௌனப்படம்
பால்யக் காலம்  தொட்டு
இன்றுவரக்கும்மான
மழையின் நியாபகங்களாய் !

கூடவே வைக்கிறது 
ஓர்  கோரிக்கை
ஒவ்வொரு நியாபகமும்
அதன் நீட்சியும்
'ஒலி ' கொடு  எனக்கு 'உயிர்' கொடு என்று !

கேட்டு தடுமாறுகிறது
மனசு - பாவம்!
அதனால் காட்சிக்கு க் காட்சி
தோழனாய் தோழியாய் தாயாய் தந்தையாய்
காதலன் காதலியாய் சகோதரன் சகோதரியாய்
சேயாய் துணையாய் எல்லாமுமாய்
மாறி மாறி குரல் 'ஒலி ' எழுப்ப முடியமா  என்ன?

ஒவ்வொரு மழையும் ஓர் உறவின் (ஸ்)வாசமல்லவா ?!!







|

This page is powered by Blogger. Isn't yours?